இந்த பாலகனைப்போல் திருடமுடியுமா உங்களால்? ( காணொளி இணைப்பு)

நாம் எதைச் செய்கின்றோமோ அதையே திரும்பச் செய்யும் குணம் கொண்டவர்கள் குழந்தைகள்.

நன்மை தீமை அறியாதவர்கள். சிறு வயதில் அவர்கள் அறியாமல் செய்யும் தவறை திருத்த வேண்டியது மூத்தோரின் கடமை.

ஆனால் மெக்ஸிகோவைச் சேர்ந்த 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் சுமார் 30-40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் இணைந்து பட்டப்பகலில் நகைக்கடைஒன்றில் களவாடியுள்ளான்.

அச்சிறுவனும் பெண்ணும் நகைக்கடையொன்றினுள் நுழைகின்றனர்.

அப்பெண்மணி கடை ஊழியர்களுடன் உரையாடி அவர்களது கவனத்தினை வேறு திசைக்குத் திருப்புகின்றாள்.

அத்தருணத்தில் அச் சிறுவன் கடையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஆபரணங்களை மிகவும் இலாவகமாக திருடுகின்றான்.

இக்காட்சிகள் அனைத்தும் பாதுகாப்பு கமெராக்களில் அப்படியே பதிவாகியுள்ளன.

திருடி முடித்த பின்னர் அப்பெண்மணி தனது காரினை தவறான இடத்தில் நிறுத்துவைத்துவிட்டதாகவும் உடனே அதனை சரியான இடத்தில் நிறுத்தி விட்டு திரும்புவதாகவும் கூறிச் சென்றுள்ளார்.

எனினும் அவர்கள் திரும்பி வரவில்லையெனவும் அச்சிறுவன் குறும்புத்தனம் மிக்கவன் என்று மட்டுமே தான் நினைத்ததாகவும் கடை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட அப்பொருட்களின் பெறுமதி சுமார் 400 அமெரிக்கடொலர்களாகும்.

அச்சிறுவன் திருடும் விதத்தினை நீங்களும் பாருங்களேன்.

கருத்துகள்