ஒளிரும் மரங்கள்: பயோலுமினசென்ஸ் ஆற்றல் மூலமான புரட்சி



மின் சக்தியில்லாமல் தானாக ஒளிரக்கூடிய மரங்களை தாம் உருவாக்கிவருவதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் இம்மரங்களை தெருவிளக்குகளுக்கு பதிலாக உபயோகப்படுத்தமுடியும்.

இதற்காக உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்தும் சிலவகையான பூச்சிகள் மற்றும் விலங்குகளின் மரபணுக்களில் சோதனை நடத்தப்பட்டுவருகின்றது. பயோலுமினசென்ஸ் எனப்படுவது (Bioluminescence) உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்தும் ஆற்றலாகும்.

இவ்வாற்றலானது குறிப்பிட்ட சில ஜீவராசிகளுக்கே சாத்தியமாக உள்ளது.இவற்றின் மரபணுக்களும் இதற்கான ஒரு காரணமாகும்.

எனவே மின்மினிப்பூச்சிகள் மற்றும் சில மின்னும் கடல்வாழ் பக்டீரியாக்களின் மரபணுக்களைக் கொண்டும் ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.இவை வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளன.

இவை மரங்களுக்கு மட்டுமன்றி ஒளிரும் பல்வேறு பல்வேறு பொருட்களுக்கும் பயன்படுத்த முடியுமெனவும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பயோலுமினசென்ஸ் ஆற்றல் கொண்ட விலங்குகள் தொடர்பான காணொளிகள்




கருத்துகள்