ஆசியாவில் முதன்முறையாக 4ஜி வலையமைப்பு: பரீட்சிக்கும் சீனா _






4ஜி (4G) எனப்படும் நான்காம் தலைமுறை (fourth-generation) மொபைல் வலையமைப்பு தொழிநுட்பத்தினை சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனமான சீனா மொபைல் நிறுவனம் பரிசோதிக்க உள்ளது.

இதற்கான அனுமதியை சீன அரசு வழங்கியுள்ளது.

மேற்படி பரீட்சாத்த நடவடிக்கையானது சீனாவின் சங்ஹாய், ஹங்ஷவு, நாஞ்ஜிங், குவங்சோவு, சென்சென், மற்றும் சியாமென் ஆகிய 6 நகரங்களில் இடம்பெறவுள்ளது.

'சீனா மொபைல்' நிறுவனமானது சீனாவின் மிகப்பெரிய தொடலைத்தொடபு நிறுவனம் என்பதுடன் சுமார் 579 மில்லியன் பாவனையாளர்களையும் கொண்டது.

அதிவேக 4ஜி தொழிநுட்பமானது சீனாவின் உள்ளூர் டிடி-எல்.டி.யி தொழிநுட்பத்துடன் இணைந்து பாவனையாளர்கள் தங்களது தரவுகளை வேகமாக பரிமாற்ற உதவும் என அந் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

3 ஆம் தலைமுறைத் தொழிநுட்பமான 3ஜி சேவைகள் சீனாவில் 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. _

கருத்துகள்