யேமன் கடற்பகுதியில் படகுகள் மூழ்கி 80 அகதிகள் பலி







யேமன் நாட்டினை நோக்கி இரு படகுகளில் பயணம் செய்த 80 ஆபிரிக்க அகதிகளும் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் இரு வேறு படகுகளில் பயணித்துள்ளனர்.

எனினும் இவ்விரு படகுகளும் வெவ்வேறு நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இப்படகுகளில் பயணித்தவர்களில் அநேகர் எத்தியோப்பிய நாட்டவர் எனவும் தற்போது மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் யேமன் நாட்டு உள்துறை அமைச்சு தெரிவிக்கின்றது. 

கருத்துகள்